TN 6th Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 2.1 – பராபரக்கண்ணி

2.1 பராபரக்கண்ணி

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 6th Standard Tamil Lesson 2.1 – பராபரக்கண்ணி. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

6th Standard Tamil Guide - Parabarakanni

6th Std Tamil Text Book – Download

ஆசிரியர் குறிப்பு

பெயர் தாயுமானவர்
பெற்றோர் கேடிலியப்பர் – கெசவள்ளி அம்மையார்
காலம் 18-ம் நூற்றாண்டு
ஊர் திருமறைக்காடு (நாகப்பட்டினம்)
பணி திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணி புரிந்தவர்.

சொல்லும் பாெருளும்

  • தண்டருள் – குளிர்ந்த கருணை
  • கூர் – மிகுதி
  • செம்மையருக்கு – சான்றோருக்கு
  • ஏவல் – தாெண்டு
  • பராபரமே – மேலான பொருள்
  • பணி – தொண்டு
  • எய்தும் –  கிடைக்கும்
  • எல்லாரும் – எல்லா மக்களும்
  • அல்லாமல் – அதைத்தவிர

பாடலின் பொருள்

  • அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தொண்டு செய்ய வேண்டும்.
  • அன்பர்களுக்குத் தொண்டு செய்பவராக என்னை ஆக்கிவிட்டால் போதும். இன்பநிலை தானே வந்து சேரும்.
  • எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும். அதைத்தவிர, வேறு எதையும் நினைக்க மாட்டேன்.

நூல் வெளி

  • பராபரக்கண்ணி பாடலை எழுதியவர் தாயுமானவர்.
  • திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணி புரிந்தவர்.
  • இப்பகுதி தாயுமானவர் பாடல்கள் என்னும் நூலில் உள்ளது.
  • இந்நூலைத் தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றுவர்.
  • இப்பாடல்கள் ‘பராபரக் கண்ணி’ என்னும் தலைப்பில் உள்ளன.
  • ‘கண்ணி’ என்பது இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல்வகை.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. “தம் + உயிர்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________

  1. தம்முயிர்
  2. தமதுயிர்
  3. தம்உயிர்
  4. தம்முஉயிர்

விடை : தம்முயிர்

2. “இன்புற்று + இருக்கை” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____________

  1. இன்புற்றிருக்கை
  2. இன்புறுறிருக்கை
  3. இன்புற்றுஇருக்கை
  4. இன்புறுஇருக்கை

விடை : இன்புற்றிருக்கை

3. “தானென்று” என்பதனைச் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் ______________

  1. தானெ + என்று
  2. தான் + என்று
  3. தா + னென்று
  4. தான் + னென்று

விடை : தான் + என்று

4. “சோம்பல்” என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல் ______________

  1. அழிவு
  2. துன்பம்
  3. சுறுசுறுப்பு
  4. சோகம்

விடை : சுறுசுறுப்பு

நயம் அறிக

பராபரக்கண்ணி பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

மோனைச் சொற்கள்

  • ம்உயிர்போல் – ண்டருள்
  • ன்புற்று – ருக்க
  • செம்மையருக்கு – செய்வேன்
  • ல்லாமல் – றியேன்

எதுகைச் சொற்கள்

  • ம்உயிர் – செம்மையருக்கு
  • ன்பர்பணி – இன்பநிலை
  • செய்யஎனை – எய்தும்
  • ல்லாரும் – அல்லாமல்

குறு வினா

1. யாருக்குத் தாெண்டு செய்ய வேண்டும்?

அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தாெண்டு செய்ய வேண்டும்.

2. இன்பநிலை எப்போது வந்து சேரும்?

அன்பர்களுக்குத் தாெண்டு செய்பவராக என்னை ஆக்கிவிட்டால் போதும் இன்பநிலை தானே வந்து சேரும்.

சிறு வினா

பராபரக்கண்ணியில் தாயுமானவர் கூறுவன யாவை?

அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தாெண்டு செய்ய வேண்டும். அன்பர்களுக்குத் தாெண்டு செய்பவராக என்னை ஆக்கிவிட்டால் போதும் இன்பநிலை தானே வந்து சேரும். எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும். அதைத்தவிர, வேறு எதையும் நினைக்க மாட்டேன் என்று தாயுமானவர் வேண்டுகிறார்.

சிந்தனை வினா

குளிரால் வாடுபவர்களுக்கு நீங்கள் எவ்விதம் உதவுவீர்கள்?

குளிரால் வாடுபவர்களுக்கு வீடுகள் கட்டுக் கொடுப்பேன். ஆடைகள் வாங்கிக் கொடுப்பேன். தேநீர், காபி வாங்கிக் கொடுப்பேன். பாய், போர்வை, ஸ்வட்டர், கம்பளிப் போர்வை, குல்லா, மப்ளர் போன்றவைகள் வாங்கிக் கொடுப்பேன். வீட்டில் அடைக்கலம் தருவேன். நெருப்பு மூட்டி குளிரைப் போக்குவேன்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. ___________ என்பதற்கு “மேலான பொருள்” என்று பொருள்

  1. மிகுதி
  2. சான்றோருக்கு
  3. பராபரமே
  4. தொண்டு

விடை : பராபரமே

2. எல்லாரும் _______________ வாழ வேண்டும்.

  1. துன்பமாக
  2. மகிழ்ச்சியாக
  3. சோர்வாக
  4. இன்பமாக

விடை : இன்பமாக

3. _______________ தாயுமானவர் பாடல்கள் என்னும் நூலில் உள்ளது

  1. பராபரக்கண்ணி
  2. இன்பத்தமிழ்
  3. தமிழ்கும்மி
  4. புதிய விடியல்கள்

விடை : பராபரக்கண்ணி

4. தமிழ் மொழி உபநிடதம் எனப் போற்றப்படுவது _______________

  1. திருக்குறள்
  2. சிலப்பதிகாரம்
  3. பராபரக்கண்ணி
  4. புதிய விடியல்கள்

விடை : பராபரக்கண்ணி

5. பொருந்தாத இணையை தேர்ந்தெடு

  1. தண்டருள் – குளிர்ந்த கருணை
  2. செம்மையருக்கு – சான்றோருக்கு
  3. பணி – தொண்டு
  4. எய்தும் – அதைத்தவிர

விடை : எய்தும் – அதைத்தவிர

6. “மிகுதி” என்பதனைக் குறிக்கும் சொல் _______________

  1. கூர்
  2. கருணை
  3. குறைவு
  4. தொண்டு

விடை : கூர்

பொருத்துக

1. ஏவல் அ. கிடைக்கும்
2. எய்தும் ஆ. மேலான பொருள்
3. பராபரமே இ. மிகுதி
4. கூர் ஈ. தாெண்டு
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

எதிர்ச்சொல் பொருத்துக

1. இன்பம் அ. சென்று
2. வந்து ஆ. மறக்க
3. நினைக்க இ. துன்பம்
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ

வினாக்கள்

1. தாயுமானவர் எதையும் நினைக்க மாட்டேன் என்று எதை கூறுகிறார்?

எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும். அதைத்தவிர, வேறு எதையும் நினைக்க மாட்டேன் என்று தாயுமானவர் வேண்டுகிறார்.

2. ‘கண்ணி’ என்பது யாது?

‘கண்ணி’ என்பது இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல்வகை.

3. எது சிறந்த வாழ்வாகும்?

அற இலக்கியங்கள் கூறும் கருத்துகளைக் கடைபிடித்து வாழ்வதே சிறந்த வாழ்வு ஆகும்.

4. அறஇலக்கியங்கள் எவற்றை உள்ளடக்கியவை?

அற இலக்கியங்கள் நம் முன்னாேர்களின் வாழ்க்கை அ னுபவங்களை உள்ளடக்கியவை.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment