TN 2nd Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 9 – படவிளக்க அகராதி

படவிளக்க அகராதி

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 2nd Std Tamil Lesson 9 – படவிளக்க அகராதி We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

2nd Standard Tamil Guide - Pada Vilakka Agarathi

2nd Std Tamil Text Book – Download

2nd Standard - Pada Villaka Agarathi

2nd Standard - Pada Villaka Agarathi

வினா விடை

1. மடிக்கணினியின் பயன்கள் யாவை?

கணினியை விட எடை குறைந்தது. விரும்பும் இடங்களுக்கு எடுத்துச் செல்லலாம். குறைந்த மின் ஆற்றலில் இயங்கும்.

2. மாம்பழம் பற்றிக் கூறுக?

மாம்பழம் தேசியக்கனி. முக்கனிகளுள் ஒன்று. மாம்பழத்திலிருந்து பழச்சாறு, பழப்பாகு ஆகியவை தயாரிக்கப்படுகின்றன.

3. மின் தூக்கியின் பயன் யாது?

படிக்கட்டுகளில் ஏறுவோருக்கு உதவுகிறது. விரைவாகச் செல்ல உதவுகிறது.

4. முத்து எவ்வாறு உருவாகிறது?

சிப்பி என்ற நீர்வாழ் உயிரினத்திலிருந்து முத்து உருவாகிறது.

5. மீன் பற்றிக் கூறுக

மீன் நீரில் வாழும் உயிரினங்களுள் ஒன்று. செதில்களால் சுவாசிக்கின்றது. மீன்கள் பல வண்ணங்களில் காணப்படும்.

6. மூங்கிலைப் பற்றி நாம் என்ன அறிகிறோம்?

புல் வகையைச் சார்ந்தது மூங்கில். மிக வேகமாக வளரும். பாண்டாக் கரடிகளுக்கு உணவாகவும். அதிலிருந்து கிடைக்கு அரிசி உணவு தயாரிக்கப்டுகிறது.

8. மெழுகு எங்கு கிடைக்கிறது? அதன் பயன் யாது?

கிடைக்கும் இடம்

உருகும் தன்மை கொண்ட மெழுகு  தாவரங்கள், விலங்குகளிடமிருந்து கிடைக்கிறது. மேலும் செயற்கையாகவும் தயாரிக்கப்படுகிறது.

பயன்

மிட்டாய்கள், மருந்துப் பொருள்கள் செய்யவும் பயன்படுகிறது.

8. மேகம் குறிப்பு வரைக?

நீரத்துளிகள் பல சேர்ந்து மேகம் ஆகிறது.

மேகம் குளிர்ந்து மழையாகி மண்ணில் விழுகிறது.

ஒவ்வொரு மேகமும் பல ஆயிரம் லிட்டர் நீரைக் கொண்டது.

9. மைனா எவ்வாறு வாழும்?

மைனா கூட்டம் கூட்டமாய் வாழும். இவை பூச்சிகளையும், பறவைகளையும் உண்டு வாழும். மரப்பொந்துகளில் கூடு கட்டும்.

10. மெளவலின் மறுபெயர் யாது?

மெளவலின் மறுபெயர் மரவல்லி. இதனைப் பன்னீர்பூ எனவும் கூறுலாம். நறுமணம் மிகுந்தது. இதன் காம்பு நீண்டு இருக்கும்.

11. மொட்டு என்பது யாது?

மலரின் இதழ்கள் விரியும் முன்பு குவிந்து மூடி இருக்கும். இதுவே மொட்டு எனப்படும். மொட்டின் அமைப்பு மலரின் வகையைப் பொருத்து மாறுபடும்

12. மோரின் நன்மைகள் யாவை?

மோர் பாலிலிருந்து கிடைக்கிறது. உடலுக்கு குளிர்ச்சியையும், வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் தன்மையும் உடையது.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment