TN 11th Standard Tamil Book Back Answers | Lesson 4.3 – நற்றிணை

4.3 நற்றிணை

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 11th Standard Tamil Lesson 4.3 – நற்றிணை. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

11th Standard Tamil Guide - narchinai

11th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • எட்டுத்தொகை நூல்களுள் முதலில் வைத்து போற்றப்படுவதாகும்.
  • “நல்ல திணை” என்ற அடைமொழியில் போற்றப்படும் சிறப்புடையது.
  • இது நானூறு பாடல்களைக் கொண்டது.
  • இந்நூல் 9 அடிச் சிற்றெல்லையும் 12 அடிப் பேரெல்லையும் கொண்டது.
  • இப்பாடல்கள் 275 புலவர்களால் பாடப்பெற்றது.
  • நற்றிணையைத் தொகுப்பித்தவர் பன்னாடுதந்த பாண்டியன் மாறன்வழுதி
  • இந்நூலுக்க கடவுள் வாழ்த்தினை பாடியவர் பெருந்தேவனார்.
  • போதனார் : சங்ககால புலவர்.
  • நற்றிணையில் 110-ம் பாடலை மட்டும் பாடியுள்ளார்.
  • நற்றிணையில் பேரெல்லை 12 அடி விதி விலக்காக 13 அடிகளை கொண்டதாக இவரது பாடல் அமைந்துள்ளது.

சொல்லும் பொருளும்

  • பிரசவம் – தேன்
  • புடைத்தல் – கோல்கொண்டு ஓச்சுதல்
  • கொழுநன் குடி – கணவனுடைய வீடு
  • வறன் – வறுமை
  • கொழுஞ்சோறு – பெருஞ்செல்வம்
  • உள்ளாள் – நினையாள்
  • மதுகை – பெருமிதம்

இலக்கணக் குறிப்பு

  • வெண்சுவை, தீம்பால் – பண்புத்தொகைகள்
  • விரிகதிர், ஒழுகுநீர் – வினைத்தொகைகள்
  • பொற்காலம், பொற்சிலம்பு – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைகள்
  • கொண்ட – பெயரெச்சம்
  • அறிவும் ஒழுக்கமும் – எண்ணும்மை
  • பந்தர் – பந்தல் என்பதன் ஈற்றுப்போலி

பகுபத உறுப்பிலக்கணம்

1. மெலிந்து = மெலி + த் (ந்) + த் + உ

  • மெலி – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

2. மறுத்து = மறு + த் + த் + உ

  • மறு – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

புணர்ச்சி விதிகள்

1. சிறுகோல் = சிறுமை + கோல்

  • “ஈறுபோதல்” என்ற விதிப்படி சிறுகோல் என்றாயிற்று.

2. பொற்சிலம்பு = பொன் + சிலம்பு

  • “ணன வல்லினம் வர ட ற வும் “ என்ற விதிப்படி பொற்சிலம்பு என்றாயிற்று.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

9 அடிச் சிற்றெல்லையும் 12 அடிப் பேரெல்லையும் கொண்ட நூல் ___________

  1. நற்றிணை
  2. குறுந்தொகை
  3. அகநானூறு
  4. ஐங்குறுநூறு

விடை : நற்றிணை

குறு வினா

கொழுஞ்சோறு – புணர்ச்சி விதி கூறுக

கொழுஞ்சோறு = கொழுமை + சோறு

  • “ஈறுபோதல்” என்ற விதிப்படி கொழு + சோறு என்றாயிற்று.
  • “இனமிகல்” என்ற விதிப்படி கொழுஞ்சோறு என்றாயிற்று.

சிறு வினா

1. “ஏவல் மறுக்கும் சிறுவினை யாட்டி
     அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல்” – இடம் சுட்டிப்  பொருள் விளக்குக

இடம்

நற்றிணையில் தலைவியைக் கண்டுவந்த செவிலித்தாய் நற்றாயிடம் கூறுவதாக இவ்வடிகள் அமைந்துள்ளன.

பொருள்

நாம் உண்ணுமாறு கூறியதை மறுத்து விளையாட்டுக் காட்டி ஓடியவள் இல்லறம் நடத்துவதற்கு உரிய அறிவையும், ஒழுக்கத்தையும் எவ்வாறு உணர்ந்தாளோ?” என்பத இக்கூற்றின் பொருள்

விளக்கம்

  • மணம் முடிந்து, கணவன் வீட்டில் வசிக்கும் தலைவியைக் காணச் சென்ற செவிலித்தாய் தலைவி நடத்தும் செம்மையான இல்லற வாழ்வைக் கண்டு வியந்தாள்.
  • அதனைத் தலைவியைப் பெற்ற நற்றாயிடம் கூறும்போது, “நம் வீட்டில் உணவு ஊட்ட விடுக்கம் வேண்டுதலை மறுத்து விளையாட்டுக் காட்டியவள், கணவன் உற்ற வறுமையை வெளிக்காட்டாது.
  • தன் வீட்டு வளமான வாழ்வை நினையாமல், ஒருபொழுது விட்டு ஒருபொழுது உண்ணும் மன வன்மையைப் பெற்றுள்ளாள்.
  • இவள் இந்த அறிவையும், ஒழுக்கத்தையும் எங்குக் கற்றாளோ? எனக் கூறிச் சொல்லி வியந்தாள்.

2. சின்னதொரு துண்டைத்
    திரும்பத் திரும்பக் கட்டி
    அழகு பார்க்கிறாள் செல்லமகள்!
    முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொள்கிறாள்!
    ஒரு குட்டி நாற்காலியே வீடாகிவிடுகிறது!
    துண்டைக் கட்டிக்கொண்டு தாயாகவும்
    மாற்றிக்கொள்ள முடிகிறது அவளால்,
    துண்டு ஒன்றுதான்….
    அதுவே அவளது மகிழ்ச்சியும்
    என் துக்கமும்
    இப்புதுக்கவிதையில் வெளிப்படும் கருத்தை ஆராய்ந்து எழுதுக.

  • பெண் குழந்தை ஒன்று துண்டு ஒன்றை எடுத்து அதைத் திரும்பத் திரும்பத் தன்மேல் சுற்றிக் கொண்டு அழகு பார்க்கிறது. தன்னை ஒரு வளர்ந்த பெண்ணாக, தாயாகக் கருதிக் கொண்டு செயல்படுகிறது.
  • அதனால் பெண்மைக்குரிய நாணத்தோடு முந்தானையை இழுத்த தன்னைப் போத்திக் கொள்கிறாள். பாதுகாப்பாக; விளையாட்டுப் பருவக் குழந்தை, எனவே, சிறியதொரு நாற்காலியை வீடாக்கிக் கொள்கிறாள்; மனத்தில் கற்பித்துக் கொள்கிறாள்.
  • துண்டைக் கட்டிக்கொண்டதால், அவளால் தாயாக மாற முடிகிறது, அச்செயலே அவளுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால பெற்றவர் என்ன நினைத்திருப்பார்? பெண்ணைப் படிக்க வைத்து மருத்துவராகவோ, ஆசிரியையாகவோ, அதிகாரியாகவோ உருவாக்க நினைத்திருப்பார்.
  • பெற்றவரர் நினைக்கும் திட்டம் அது. ஆனால், பேதைப் பருவப் பெண்குழந்தை சமுதாயத்தில், சூழலில் காணும் காட்சிகளை வைத்துக்கொண்டு, தன் எதிர்காலத்திற்குத் திட்டமிடுகிறது. அதனால் மகிழ்ச்சி கொள்கிறது. பெண் குழந்தையின் மகிழ்ச்சிச் செயல் பெற்றவருக்குத் துன்பமாக மாறுகிறது.

நெடு வினா

தலைவியின் இல்லறப் பாங்கினைப் பறறிச் செவிலித்தாய் நற்றாயிடம் வியந்த கூறுவன யாவை?

  • விளையாட்டுப் பருவம் மாறாதவள் தலைவி. அவர் தலைவனோடு உடன்போக்கிற்கு உட்பட்டாள்
  • பின்னர் வரைந்து (மணம் முடித்து) இல்லறத்தில் ஈடுபட்டாள்.
  • அந்நிலையில் அவளைக் காணச் சென்ற செவிலித்தாய், தலைவியான தன் வளர்ப்பு மகள் நடத்தும் குடும்பப் பாங்கைக் கண்டாள். அதனை ந்ற்றாயிடம் வியந்து பாராட்டினாள்

பிள்ளைப் பருவ விளையாட்டு

  • நம் வீட்டில் பொற்கிண்ணத்தில் தேன் கலந்த பாலை ஒரு கையிலேந்தி, அச்சுறுத்தி உண்ண வைப்பதற்குப் பூச்சுற்றிய மென்மையான கோலை இன்னொரு கையிலேந்தி இதனை உண் என்று கூறினோம்.
  • அப்போது வீட்டு முற்றத்தில் இருந்த பந்தாரைச் சுற்றிச்சுற்றி ஓடி, “நான் உண்ணேன்” என்று மறுப்பாள். கால் சிலம்பு ஒலிக்க ஓடிய அவளைப் பின் தொடர முடியாமல் செவிலியர் களைத்துப் போவோம்.

வியப்புத் தரும் இல்லறப் பாங்கு

  • இப்படி விளையாட்டுக் காட்டிய பெண்ணாகிய நம் மகள் இத்தகைய அறிவையும், ஒழுக்கத்தையும் எங்குக் கற்றாளோ? என வியப்பாக உள்ளது.
  • தான் மணந்த கணவன் வீட்டில் வறுமையுற்ற நிலையிலும், தன் தந்தையின் வீட்டில் பெற்ற வளமான ஒருபொழுது விட்டு ஒரு பொழுது உண்ணும் மனவலிமையைப் பெற்றவளாக இருக்கிறாள்
  • இது என்ன வியப்பு? என்று நற்றாரிடம் செவிலித்தாய் கூறினாள்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக்குறிப்பு

  • சிறுகோல், முதுசெவிலி, சிறுவிளையாட்டு, கொடுஞ்சோறு– பண்புத்தொகைகள்
  • கலந்த, கொடுத்த – பெயரெச்சங்கள்
  • ஏந்தி, பிழைப்ப, ஒழிய, ஓடி, மெலிந்து, மறுத்து – வினையெச்சங்கள்
  • உள்ளான் – முற்றெச்சம்
  • கொழுநன்கு – ஆறாம் வேற்றுமைத் தொகை
  • உண் – முன்னிலை ஏவல் ஒருமை வினைமுற்று
  • ஒக்குபு – செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்

1. பிழைப்ப = பிழை + ப் + ப் + அ

  • பிழை- பகுதி
  • ப் – சந்தி
  • ப் – இறந்தகால இடைநிலை
  • அ –  பெயரெச்ச விகுதி

2. ஏந்தி = ஏந்து + இ

  • ஏந்து – பகுதி
  • இ –  வினையெச்ச விகுதி

3. உணர்ந்தனள் = உணர் + த் (ந்) + த் + அன் + அள்

  • உணர் – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • அன் – சாரியை
  • அள் – பெண்பால் வினைமுற்று விகுதி

4. கொண்ட = கொள் (ண்) + ட் + அ

  • கொள் – பகுதி
  • ள் – ண் ஆனது விகாரம்
  • ட் – இறந்தகால இடைநிலை
  • அ –  பெயரெச்ச விகுதி

புணர்ச்சி விதிகள்

1. பூந்தலை = பூ + தலை

  • “பூப்பெயர் முன் இன மென்மையும் தோன்றும்” என்ற விதிப்படி பூந்தலை என்றாயிற்று.

2. யாண்டுணர்ந்தனள் = யாண்டு + உணர்ந்தனள்

  • “உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” விதிப்படி யாண்ட் + உணர்ந்தனள் என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி யாண்டுணர்ந்தனள் என்றாயிற்று.

3. பொற்கலம் = பொன் + காலம்

  • “ணன வல்லினம் வர ட ற வும் “ என்ற விதிப்படி பொற்கலம் என்றாயிற்று.

4. பொற்சிலம்பு = பொன் + சிலம்பு

  • “ணன வல்லினம் வர ட ற வும் “ என்ற விதிப்படி பொற்சிலம்பு என்றாயிற்று.

5. சிறுகோல் = சிறுமை + கோல்

  • “ஈறுபோதல்” என்ற விதிப்படிசிறுகோல் என்றாயிற்று.

6. தெண்ணீர் = தெள் + நீர்

  • “ணன வல்லினம் வர ட ற வும் “ என்ற விதிப்படி தெள் + ணீர் என்றாயிற்று.
  • லள வேற்றுமையில் மெலிமேவின் னணவும் ஆகும் “ என்ற விதிப்படி தெண்ணீர் என்றாயிற்று.

7. முத்தரி = முத்து + அரி

  • “உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” விதிப்படி முத்த் + அரி என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி முத்தரி என்றாயிற்று.

8. நரைக்கூந்தல் = நரை + கூந்தல்

  • “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி நரைக்கூந்தல் என்றாயிற்று

9. உற்றென = உறு + என

  • “முற்றும் அற்று ஒரோ வழி” விதிப்படி உற் + என என்றாயிற்று.
  • “தனிக்குறில் முன்ஒற்று வரின் இரட்டும்” விதிப்படி உற்ற் + என என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி உற்றென என்றாயிற்று.

10. வெண்சுவை = வெண்மை + சுவை

  • “ஈறுபோதல்” என்ற விதிப்படி வெண்சுவை என்றாயிற்று.

பலவுள் தெரிக

1. தொன்மையும், தனிச்சிறப்பும் கொண்ட இலக்கியங்களை __________ என்று அழைப்பர்

  1. பாட்டியல் நூல்கள்
  2. செவ்வியல் நூல்கள்
  3. சங்க இலக்கிய நூல்கள்
  4. இலக்கண நூல்கள்

விடை : செவ்வியல் நூல்கள்

2. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்துப் பாடப்பட்டது __________

  1. அகநானூறு
  2. புறநானூறு
  3. நற்றிணை
  4. குறுந்தொகை

விடை : நற்றிணை

3 நற்றிணையைத் தொகுப்பித்தவர் __________

  1. பூரிக்கோ
  2. பாண்டியன் பெருவழுதி
  3. பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி
  4. பாரதம்பாடிய பெருந்தேவனார்

விடை : பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி

4. __________ = நன்மை + திணை

  1. அகநானூறு
  2. புறநானூறு
  3. நற்றிணை
  4. குறுந்தொகை

விடை : நற்றிணை

5. நற்றிணைக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் = __________

  1. பூரிக்கோ
  2. பாண்டியன் பெருவழுதி
  3. பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி
  4. பாரதம்பாடிய பெருந்தேவனார்

விடை : பாரதம்பாடிய பெருந்தேவனார்

6. __________ மனை மருட்சி என குறிப்பிடப்படுவது

  1. மகள் நிலை உரைத்தல்
  2. தலைவி ஆற்றுவித்தல்
  3. செவிலி கண்டுரைத்தல்
  4. மகள் மறுத்து மொழிதல்

விடை : மகள் நிலை உரைத்தல்

7. “பொழுது மறுத்து உண்ணும் சிறுமது கையள்” என போற்றப்பட்டவள் __________

  1. செவிலித்தாய்
  2. தலைவி
  3. நற்றாய்
  4. தோழி

விடை : தலைவி

8. தலைவியன் இல்லறப் பாங்கை நற்றாயிடம் பாராட்டியது __________

  1. செவிலித்தாய்
  2. தலைவி
  3. நற்றாய்
  4. தோழி

விடை : செவிலித்தாய்

9. 9 அடிச் சிற்றெல்லையும் 12 அடிப் பேரெல்லையும் கொண்ட 400 பாடல்களின் தொகுப்பு _________

  1. அகநானூறு
  2. புறநானூறு
  3. குறுந்தொகை
  4. நற்றிணை

விடை : நற்றிணை

10. நற்றிணையில் பேரெல்லையும் 12 அடி விதிவிலக்காக 13 அடிகளை கொண்டதாக _________ பாடல் அமைந்துள்ளது

  1. நல்லாதனார்
  2. போதனார்
  3. கூடலூர்கிழார்
  4. ஒளைவயார்

விடை : போதனார்

பொருத்துக

1. பிரசவம் அ. வறுமை
2. உள்ளாள் ஆ. பெருமிதம்
3. வறன் இ. தேன்
4. மதுகை ஈ. நினையாள்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ

பொருத்துக

1.நற்றிணை அ. 4 அடி முதல் 8 அடி வரை
2. குறுந்தொகை ஆ. 9 அடி முதல் 12 அடி வரை
3. அகநானூறு இ. 3 அடி முதல் 6 அடி வரை
4. ஐங்குறுநூறு ஈ. 13 அடி முதல் 31 அடி வரை
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

குறு வினா

1. செவிலியர் நடை தளர்ந்து நின்றது ஏன்?

தலைவியின் குழந்தைப் பருவத்தில், உணவாக ஊட்டப் பொற்கிண்ணத்தில் பால் ஏந்திச் சென்றனர் செவிலியர். “நான் உண்ணேன்” என மறுத்த முத்துப்பரல் பொற்சிலம்பு ஒலிக்க, பந்தரைச் சுற்றிசச் சுற்றி ஓடினாள். அவளைப் பின் தொடர முடியாமல் செவிலியர் நடை தளரந்தனர்.

2. ஒழுகுநீர் நுணங்கறல் போலப்
    பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே. – பொருள் தருக

பெருகி ஓடும் நீரில் கிடக்கும் நுண்மணல் இடைவெளி விட்டு இருக்கும். அதுபோல் தலைவி தன் குடும்ப நிலைக்கேற்ப ஒரு பொழுது விட்டு இன்னொரு பொழுது உண்ணும் வன்மையைப் பெற்றிருந்தாள் என்பதாம்.

3. நற்றிணை குறிப்பு வரைக?

  • எட்டுத்தொகை நூல்களுள் முதலில் வைத்து என்னப்படுவது
  • இந்நூல் 9 அடிச் சிற்றெல்லையும் 12 அடிப் பேரெல்லையும் கொண்ட நானூறு பாடல்களின் தொகுப்பாகும்.
  • இப்பாடல்கள் 275 புலவர்களால் பாடப்பெற்றது
  • பாடமாக அமைந்த பாடலைப் பாடியவர் சங்ககாலத்தில் வாழந்த “போதனார்”
  • நற்றிணையைத் தொகுப்பித்தவர் பன்னாடுதந்த பாண்டியன் மாறன்வழுதி
  • இந்நூலுக்க கடவுள் வாழ்த்தினை பாடியவர் பெருந்தேவனார்

4. மகள் நிலை உரைத்தல் துறை விளக்குக

  • திணையின் உட்பிரிவு துறை, மகள் நிலை உரைத்தல் என்பத பாலைத்திணையின் உட்பிரிவாகும்
  • தலைவனோடு உடன்போகிய (தலைவனை மணம்புரிய பிரிந்து போன விளையாட்டுப் பருவம் மாறாத மகள் நடத்தும் இல்லறச் சிறப்பைக் கண்ட செவிலித்தாய், அது குறித்து நற்றாயிடம் வியந்து கூறுவதாக அமைந்துள்ளது.
  • இதனை மனைமருட்சி எனவும் கூறுவர்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment