TN 10th Standard Tamil Book Back Answers | Lesson 9.5 – அணி

9.5 அணி

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 10th Standard Tamil Lesson 9.5 – அணி. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

10th Standard Tamil Guide - Ani

10th Std Tamil Text Book – Download

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக.

வாய்மையே மழைநீராகி இத் தொடரில் வெளிப்படும் அணி

  1. உவமை
  2. தற்குறிப்பேற்றம்
  3. உருவகம்
  4. தீவகம்

விடை : உருவகம்

குறு வினா

1. தீவக அணியின் வகைகள் யாவை?

முதல்நிலைத் தீவகம், இடைநிலைத் தீவகம், கடைநிலைத் தீவகம் என்னும் மூன்று வகையாக வரும்.

2. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது. -இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?

இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி நிரல் நிரை அணி ஆகும்.

இலக்கணம்:-

நிரல் – வரிசை; நிறை – நிறுத்தல்

விளக்கம்:-

சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல் நிறை அணி எனப்படும்.

சிறு வினா

கவிஞர் தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.

அணி இலக்கணம்:-

இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

எ.கா.:-

‘போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
‘வாரல்’ என்பனபோல் மறித்துக்கை காட்ட’

பாடலின் பொருள்:-

கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது வர வேண்டாம் எனத் தடுப்பது போல, கை காட்டியது என்பது பொருள்.

அணிப் பொருத்தம்:-

கோவலனும், கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்றபோது மதிலின் மேலிருந்த கொடிகள் காற்றில் இயற்கையாக அசைந்தன. ஆனால், இளங்கோவடிகள் கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக்கருதி அக்கொடிகள் கையை அசைத்து, ‘ இம்மதுரைக்குள் வரவேண்டா ’ என்று தெரிவிப்பது போலக் காற்றில் அசைவதாகத் தம் குறிப்பைக் கொடியின் மீது ஏற்றிக் கூறுகிறார்.

இவ்வாறு இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

கற்பவை கற்றபின்

முன்வகுப்பில் கற்ற அணிகளை எடுத்துக்காட்டுகளுடன் தொகுத்து ஒப்படைவு உருவாக்குக

உவமையணி

“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை”

பிறிது மொழிதலணி

“பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்”

வேற்றுமையணி

“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு”

சொற்பொருட் பின்வரு நிலையணி

“உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து”

கூடுதல் வினாக்கள்

1. அணி என்றால் என்ன? 

மக்களுக்கு அழகு சேர்ப்பன அணிகலண்கள் . அதுபோன்று செய்யுள்களுக்கு அழகு செய்து சுவையை உண்டாக்குவன அணிகள் ஆகும்.

2. தீவக அணி என்றால் என்ன?

தீவகம் என்னும் சொல்லுக்கு ‘விளக்கு’ என்று பொருள்.

ஓர் அறையில், ஓர் இடத்தில் வைக்கப்பட்ட விளக்கானது அவ்வறையில் பல இடங்களிலும் உள்ள பொருள்களுக்கு வெளிச்சம் தந்து விளக்குதல் போல, செய்யுளின் ஓரிடத்தில்நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவதால் இவ்வணி தீவக அணி எனப்பட்டது.

3. தன்மையணி என்றால் என்ன?

எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையினைக் கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரிய சொற்களை அமைத்துப் பாடுவது தன்மையணியாகும். இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர்.

4. தன்மையணியின் வகைகள் யாவை?

பொருள் தன்மையணி, குணத் தன்மையணி, சாதித் தன்மையணி, தொழிற் தன்மையணி என நான்கு வகைப்படும்.

5. நிரல் நிறை அணி என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விவரி.

நிரல் = வரிசை; நிறை = நிறுத்துதல்.

சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப்
பொருள் கொள்வது நிரல் நிறை அணி எனப்படும்.

எ.கா.:-

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

பாடலின் பொருள்:-

இல் வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

அணிப்பொருத்தம்:-

இக்குறளில் அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும் பயனும் என்ற சொற்களை முறைபடக் கூறியுள்ளமையால் இது நிரல் நிறை அணி ஆகும்.

மொழியை ஆள்வோம்

படித்துச் சுவைக்க

”எழுத்தால், பேச்சால், ஆற்றலால், அறிவால், தொண்டால், பண்பால், பணியால், கனிவால் தமிழக வரலாற்றில் குறிக்கப்படும்படியான அந்த அறிஞர் பெருமகனாரின் அருமைத் திருமுகத்தைக் கடைசியாகத் தரிசிக்க வழியெல்லாம் விழியெல்லாம் நீர்தேக்கி ஊர்வலத்தைப் பார்க்கக் காத்திருந்த மக்கள் எத்தனை லட்சம் பேர்! அண்ணாவின் பொன்னுடலை நன்றாகத் தாங்கி வந்த பீரங்கி வண்டி தூரத்தில் வந்தபோதே பொங்கிப் பொருமித் துடித்த உள்ளங்கள் எத்தனை எத்தனை லட்சம்! தமது வாழ்வுக் காலத்தையே ஒரு சகாப்தமாக்கி முடித்துவிட்டுச் சென்ற அந்தப் பேரறிஞர் திருமுகத்தைக் கண்டதும் குவிந்த கரங்கள் எத்தனை எத்தனை லட்சம்! கண்ணீரை அருவியாய்க் கொட்டிய கண்கள் எத்தனை எத்தனை லட்சம்! கண்ணுக்கு ஒளியாய்த் தமிழுக்குச் சுவையாய் மக்களுக்கு வாழ்வாய் அமைந்துவிட்ட அந்தத் தலைவரின் இறுதிப் பயணம் சென்ற வழியெல்லாம் மலர் தூவி மாலைகளை வீசிய கரங்கள் எத்தனை எத்தனை லட்சம்! அந்த அறிவுக் களஞ்சியத்தைத் தாங்கிய வண்டி தங்களை விட்டு முன்னோக்கி நகர்ந்தபோது இதயத்தையே, உயிர் மூச்சையே இழந்துவிட்டது போலக் கதறித் துடித்துத் தரையில் புரண்டு புரண்டு புழுவாய்த் துடித்தவர்கள் எத்தனை லட்சம் பேர்கள்!

மொழிபெயர்க்க.

1. Education is what remains after one has forgotten what one has learned in School. – Albert Einstein

விடை : ஒரு பள்ளியில் கற்றுக்கொண்டதை மறந்து விட்டால், பள்ளியில் கற்ற கல்வியினால் பயன் என்ன!

2. Tomorrow is often the busiest day of the week. – Spanish Proverb

விடை : இவ்வாரத்தில் நாளை ஒருநாள் மட்டுமே வேலைப்பளு உள்ளது.

3. It is during our darkest moments that we must focus to see the light. – Aristotle

விடை : நம் இருண்ட தருணங்களிலும் ஒளியைப் பார்ப்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

4. Success is not final, failure is not fatal. It is the courage to continue that counts. – Winston Churchill.

விடை : வெற்றி என்பது முடிவல்ல, தோல்வி என்பது விதியல்ல. இரண்டுக்காகவும் தொடரந்து முயற்சியுடன் ஊக்கத்துடன் செயல்படுவதே எண்ணப்படும்.

உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக.

1. தாமரை இலை நீர்போல 

விடை : பட்டினத்தார் வாழ்க்கை தாமரை இலைத் தண்ணீர்போல ஒட்டாதது துறந்தார்

2. மழைமுகம் காணாப் பயிர்போல 

விடை : வெற்றியை எதிர்பார்த்து தோல்வி ஏற்பட்டதால் ரகு மழைமுகம் காணாப் பயிர்போல வாடி நின்றான்.

3. கண்ணினைக் காக்கும் இமை போல

விடை : பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளை கண்ணினைக் காக்கும் இமை போல பாதுகாத்து வளர்ப்பர்

4. சிலை மேல் எழுத்து போல

விடை : கவிஞர்களின் கவிதைகள் சிலை மேல் எழுத்து போல மனதில் பதிந்தது

பொருத்தமான நிறுத்தக் குறியிடுதல்

சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன் மலைய மான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர் இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.

விடை:-

சேரர்களின் பட்டப் பெயர்களில், கொல்லி வெற்பன்‘ ‘மலைய மான் போன்றவை குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன், ‘கொல்லி வெற்பன் எனவும், பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.

குறுக்கெழுத்து புதிர்

10th Standard - Ani - Kurukeluthu Puthir

இடமிருந்து வலம்:-

1. சிறுபொழுதின் வகைகளுள் ஒன்று ………………. (2)

விடை : காலை

2. நேர் நேர் – வாய்பாடு ………………. (2)

விடை : தேமா

11. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று ………………. (5)

விடை : கலித்தொகை

14. மக்களே போல்வர் …………………… (4)

விடை : கயவர்

மேலிருந்து கீழ் :-

1. முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுது ………………. (5)

விடை : கார்காலம்

2. மொழிஞாயிறு ………………. (9)

விடை : தேவநேயப்பாவாணர்

3. நல்ல என்னும் அடைமொழி கொண்ட தொகைநூல் ……………. (5)

விடை : குறுந்தொகை

4. கழை என்பதன் பொருள் ………………. (4)

விடை : மூங்கில்

7. மதியின் மறுபெயர், இது நிலவையும் குறிக்கும் (4)

விடை : திங்கள்

10. குறிஞ்சித் திணைக்குரிய விலங்கு ……………….

விடை : சிங்கம்

12. …………. என்பது புறத்திணைகளுள் ஒன்று

விடை : கைக்கிளை

வலமிருந்து இடம் :-

15. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் – ஆசிரியர் (4)

விடை : ஒளவையார்

16. மதிமுகம் உவமை எனில் முகமதி ………………. (5)

விடை : உருவகம்

கீழிருந்து மேல் :-

5. விடையின் வகைகள் ………………. (3)

விடை : எட்டு

6. வீரமாமுனிவர் இயற்றிய நூல் ………………. (5)

விடை : தேம்பாவணி

8. பிள்ளைத்தமிழின் இரண்டாம் பருவம் ………………. (4)

விடை : செங்கீரை

9. முப்பால் பகுப்பு கொண்ட நூல்களுள் ஒன்று ………………. (5)

விடை : திருக்குறள்

13. மன்னனது உண்மையான புகழை எடுத்துக் கூறுவது ………………. (7)

விடை : மெய்க்கீர்த்தி

17. 96 வகை சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று ………………. (7)

விடை : பிள்ளைத்தமிழ்

18. செய்தவம் – இலக்கணக்குறிப்பு (5)

விடை : வினைத்தொகை

பாடலில் இடம்பெற்றுள்ள தமிழ்ப் புலவர்களின் பெயர்களைக் கண்டறிந்து எழுதுக.

கம்பனும் கண்டேத்தும் உமறுப் புலவரை எந்தக்
கொம்பனும் பணியும் அறம்பாடுஞ் ஜவாது ஆசுகவியை
காசிம்புலவரை, குணங்குடியாரை சேகனாப் புலவரை
செய்குதம்பிப் பாவலரைச் சீர்தமிழ் மறக்காதன்றோ

  • கம்பர்
  • ஜவாது ஆசுகவி
  • குணங்குடியார்
  • செய்குதம்பி பாவலர்
  • உமறுப்புலவர்
  • காசிம்புலவர்
  • சேகனாபுலவர்

விண்ணப்பப் படிவத்தை நிரப்புக.

மேல்நிலை வகுப்பு – சேர்க்கை விண்ணப்பம்

10th Standard - Ani - Vinnappa padivathai nirappuga

மொழியோடு விளையாடு

விளம்பரத்தை நாளிதழுக்கான செய்தியாக மாற்றியமைக்க

10th Standard - Ani - Nilathirkana Sethiya martuga

“சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு விழா”

ஜனவரி 18, நெல்லை

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா கொண்டாடப்பட்டது. போக்குவரத்துக் காவல்துறை ஆய்வாளர் தலைமையேற்றார். சாலைக் குறியீடுகளை விளக்கி, குறியீடுக்ள உணர்த்துவதை மனதல் கொண்டு கட்டுப்பாடுடன் கூடிய வேகத்தில் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். குழந்தைகள், மாணவர்கள் மனதில் சாலைவிதிகளை பதித்து விழிப்புணர்வுடன் வளர்க்க அறிவுறுத்தினார். தலைக்கவசம், நான்கு சக்கர வாகனம் ஓட்டும் போது இருக்கை பட்டை கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என்றார். சாலை விபத்தினால் ஏற்படும் மரணங்களை நம் விழிப்புணர்வால் தடுத்து விடலாம் என்றார். நிறைவாக வருகை தந்திருந்த பெரியோர், குழந்தைகள், காவல்துறையைச் சார்ந்தவர் அனைவரும் இணைந்து “சாலை விழிப்புணர்வை வலியுறுத்தி” மாரத்தான் ஓட்டம் நிகழ்த்தினர்

கீழ்க்காணும் நாள்காட்டியில் புதன் கிழமையை ஒன்றாம் தேதியாகக் கொண்டு தமிழெண்களால் நிரப்புக.

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி
௧௦ ௧௧
௧௨ ௧௩ ௧௪ ௧௫ ௧௬ ௧௭ ௧அ
௧௯ உ0 ௨க ௨௨ ௨௩ ௨௪ ௨௫
௨ ௬ ௨௭ ௨அ ௨௯ ௩௦ ௩௧

அகராதியில் காண்க

1. குணதரன்

  • நற்குணமுள்ளவன்
  • முனிவன்

2. செவ்வை

  • நேர்மை
  • செம்மை
  • மிகுதி
  • வழி செப்பம்
  • சரியான நிலை

3. நகல்

  • சிரிக்கை
  • மகிழ்ச்சி
  • நட்பு
  • படி
  • பிரதி
  • ஏளனம்

4. பூட்சை

  • யானை
  • கொள்கை
  • மன உறுதி
  • சிங்கம்
  • வலிமை

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

10th Standard - Ani - katchiyai kandu kavinurai eluthuga

அறம் என்பது
வலக்கைக் கொடுப்பது
இடக்கைக்குத் தெரியக்கூடாது – இது
தர்மத்தின் வேர்
அறமும் நியதியும்
அக்காலமும் இக்காலமும் உண்டு
தர்மம் செய்வது விளம்பரமல்ல
தாழ்ந்தோர் உயர்வு பெய
சுயப்படம் எடுத்து
வலைதளம் அனுப்பும்
வழக்கமே இன்று அறமா?

நிற்க அதற்குத் தக

ஒவ்வொரு சூழலிலும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தபடி இருக்கிறார்கள்; உதவி பெற்றபடியும் இருக்கிறார்கள்; சில உதவிகளை அவர்கள் மீதுள்ள அன்பினால் செய்கிறோம்; சில உதவிகளை இரக்கத்தால் செய்கிறோம். தொடர்வண்டியில் பாட்டுப் பாடிவரும் ஒருவருக்கு நம்மையறியாமல் பிச்சை போடுகிறோம். தொல்லை வேண்டோம் என்று கருதி, வேண்டாவெறுப்போடு சில இடங்களில் உதவி செய்கிறோம்!

நீங்கள் செய்த, பார்த்த உதவிகளால் எய்திய மனநிலை…

உதவி மனநிலை
வகுப்பறையில் எழுதுகோல் கொடுத்த உதவிய போது இக்கட்டான சூழலில் செய்த உதவியால் எனக்கு மனநிறைவு; அவருக்கு மனமகிழ்ச்சி!
உறவினருக்கு என் அம்மா பணம் அளித்து உதவியபோது கல்லூரி படிப்பைத் தொடர முடிந்தால் உறவினருக்கு ஏற்பட்ட நன்றியுணர்வு
பேருந்தில் பயணம் செய்த போது உடண் பயணம் செய்த முதியோருக்குப் பயணச்சீட்டு எடுத்துக் கொடுத்து உதவிய போது மனநிறைவும், அவரது முகத்தின் அமைதியும், மகிழ்ச்சியும் என்னையும் மகிழச் செய்தது.
ஒருவேளை உணவு வழங்கிய போது பசிப்பிணி தீர்த்த மகிழ்ச்சி ஏற்பட்டது.

கலைச்சொல் அறிவோம்

  • Humanism – மனிதநேயம்
  • Cultural Boundaries – பண்பாட்டு எல்லை
  • Cabinet – அமைச்சரவை
  • Cultural values – பண்பாட்டு விழுமியங்கள்

அறிவை விரிவு செய்

  • யானை சவாரி – பாவண்ணன்
  • கல்மரம் – திலகவதி
  • அற்றைத் திங்கள் அவ்வெண்ணில் – ந.முருகேசபாண்டியன்

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment