TN 7th Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 1.4 – ஆழ்கடலின் அடியில்

1.4 ஆழ்கடலின் அடியில்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 7th Standard Tamil Lesson 1.4 – ஆழ்கடலின் அடியில்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

7th Standard Tamil Guide - aalkadalin adiyil

7th Std Tamil Text Book – Download

நூல் வெளி

ஜூல்ஸ் வெர்ன்

  • அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர்.
  • பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர்.
  • பல கண்டுபிடிப்புகள் அறிவியல் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே அதைப் பற்றித் தமது புதினங்களில் எழுதியவர்.
  • எண்பது நாளில் உலகத்தைச் சுற்றி, பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம், ஆழ்கடலின் அடியில் உள்ளிட்ட பல புதினங்களைப் படைத்துள்ளார்.

மதிப்பீடு

‘ஆழ்கடலின் அடியில்’ கதையைச் சுருக்கி எழுதுக.

கதைமாந்தர் அறிமுகம்

பியரி – விலங்கியல் பேராசிரியர்

ஃபராகட் – அமெரிக்கா நியூயார்க்கிலிருந்து புறப்பட்ட போர்க் கப்பலின் தலைவர்.

நெட் – ஈட்டி எறிந்து திமிங்கலங்களை வேட்டையாடுவதில் வல்லவர்.

கான்சீல் – பியரியின் உதவியாளர்.

முன்னுரை

அறிவியல் புனைகதைகளின் தலைமகன் எனப் புகழ்ப்படுவர் ஜூல்ஸ் வெர்ன். அவர் எழுதிய “ஆழ்கடலின் அடியில்” என்ற புதினத்தின் கதையினைச் சுருக்கிக் காண்போம்.

விலங்கைத் தேடிய பயணம்

கடலில் உலோகத்தலால் ஆன் உடம்பு கொண்ட ஒரு விலங்கு கடலில் செல்வோரைத் தாக்கியது. அதனைக் கண்டுபிடித்து அழிக்க பியரி, ஃபராகட், நெட், கான்சீல் ஆகியோர் கொண்ட குழு நியூயார்க் நகரில் இருந்து போர்க்கப்பலில் செல்கின்றது. அமெரிக்கா முதல் ஜப்பான் வரை மூன்று மாதங்களாகத் தேடியும் அந்த விலங்கு கிடைக்கவில்லை. ஒரு நாள் அந்த விலங்கு இவர்களின் கப்பலைத் தாக்கியது. பீரங்கிக் குண்டுகளும், நெட்டின் ஈட்டியும் அந்த விலங்குகளை எதுவும் செய்ய முடியவில்லை. அது இவர்களைத் தூக்கி வீசியது.

நீர் மூழ்கிக் கப்பல்

அது விலங்கன்று, நீர் மூழ்கிக் கப்பல் என்பதை அவர்கள் அறிந்தனர். அவர்களை நீர் மூழ்கிக் கப்பல் வீரர்கள் சிறைபிடித்தனர். அந்த நீர் மூழ்கிக் கப்பல் பெயர் நாட்டிலஸ் என்றும், அதன் தலைவர் நெமோ என்பதையும், இக்கப்பலை விந்தையான விலங்கு என்று நம்ப வைத்ததையும் நேமோ கூறிவிட்டு, இச்செய்தி அறிநத உங்களை வெளியில் அனுப்ப முடியாது. எனக்கான இந்தத் தனி உலகத்தில் தான் நீங்களும் இருக்க வேண்டும் என்றார். அனைவரும் அச்சப்பட்டனர்.

கப்பலின் இயக்கம்

கப்பலுக்கு தேவையானவை எப்படி உங்களுக்கு கிடைக்கின்று என்று பியரி நெமோவிடம் கேட்டார். அதற்கு மின்சாரம் தயாரிக்க தேவையான கருவிகள் உள்ளன. கப்பலில் மிகப்பெரிய நீர் தொட்டி உள்ளது. அதனை நிரப்பும் போது கப்பல் கடல் அடியிலும் நீர் வெளியேறும் போது மேல் செல்கின்றது. சில நாட்களுக்கு ஒரு முறை கப்பல் மேலே வரும் பொழுது சுவாசிக்கத் தேவையான காற்றைப் புதுப்பித்துக் கொள்ளும், காற்றுச் சேகரிக்கும் நிறைய பைகளும் உள்ளன என்றார்.

மணல் திட்டில் சிக்கிய கப்பல்

ஒரு நாள் மணல் திட்டில் கப்பல் சிக்கி விட்டது. தூரத்தில் தெரிந்த தீவில் காய்கறி வாங்கிவர அவர்களை, நெமோ இசைவளித்தார். அவர்கள் காய்கறிகள் வாங்கிக் கொண்டு திரும்பும்போது அத்தீவில் உள்ளவர்கள் துரத்தினார்கள். அவர்களிடம் மாட்டாமல் கப்பல்கள் வந்து சேர்ந்தனர். அவர்கள் கப்பலை முற்றுகையிட்டனர். கடலின் நீர்மட்டம் உயர கப்பல் மேலே வந்தது.  ஆறு நாள் பேராட்டத்திற்கு பிறகு கப்பல் பயணம் தொடர்ந்தது. கடலுக்கடியில் அவர்கள் செல்லும்போது முத்துக்குளித்துக் கொண்டிருந்த இந்தியர் ஒருவரை சுறாவிடம் இருந்து காப்பாற்றினர். கடலடியின் உன்னத காட்சிகளை எல்லாம் கண்டு மகிழ்ந்தனர்.

முடிவுரை

பெரும் கடல் சுழலில் கப்பல் மாட்டிக் கொண்டது மூவரும் தூக்கி வீசப்பட்டனர். மயக்க நிலையில் நார்வே நாட்டு மீனவர் குடிசையில் இருந்ததை விழித்து பார்த்தனர் நெமோபும் கப்பலும் என்ன ஆனது என்று தெரியவில்லை.

கூடுதல் வினாக்கள்

1. ஆழ்கடல் காட்சியொன்றைக் கற்பனையாகப் படம் வரைந்து வண்ணம் தீட்டுக.

7th Standard Tamil Guide - aalkadalin adiyil- b

2. நீர்மூழ்கிக் கப்பல் இயங்கும் முறைபற்றிய செய்திகளைத் திரட்டித் தொகுத்து எழுதுக.

  • தண்ணீர் ஒரு பொருள் தன் எடையை விட அதிக எடையுள்ள நீரை வெளியேற்றினால் மட்டுமே அப்பொருள் மிதக்கும் என்பத ஆர்க்கிமிடிஸ் தத்தவம்.
  • அதன் அடிப்படையில் தான் நீர் மூழ்க்கிகப்பல்கள் இயங்குகின்றன.
  • சரளைத் தொட்டிகள் நீரு் மூழ்கி கப்பல்களைச் சுற்றி வடிவமைக்கப்ட்டு இருக்கும்.
  • இது காற்றால் நிரப்பப்பட்டு இருக்கும். சுற்றிக் காற்று இருப்பதால், நீரில் இருக்கும் காற்றை வெளியேற்றினால் இந்த இடத்தில் நீரானது நிரம்பும்.
  • இப்படி நிரம்பினால் எடை அதிகரிக்கும் கப்பல் நீரில் மூழ்கும்.

கூடுதல் வினாக்கள்

1. ஜூல்ஸ் வெர்ன் எவ்வாறு புகழப்படுகிறார்?

அறிவியல் புனைகதைகளின் தலைமகன்

2. ஜூல்ஸ் வெர்னின் எழுதிய நூல்களை கூறு

  • எண்பது நாளில் உலகத்தைச் சுற்றி
  • பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம்
  • ஆழ்கடலின் அடியில்

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment